Thursday 30 August 2012

புதுவையில் ஆசிரியர் தகுதித் தேர்வு 100% "பெயில்


தமிழக அரசு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் புதுவை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இதில் 2-வது தாளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. முதல் தாளில் 20 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
              தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தால், கடந்த
ஜூலை 12-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்சி பட்டயம் பெற்றவர்களும், பட்டம் பெற்றவர்களும் தேர்வெழுதினர். முதல் தாளை 4,769 பேரும், 2-வது தாளை 4,501 பேரும் எழுதினர். இதன் முடிவுகள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் 60 விழுக்காடு அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

      மீண்டும் தேர்வு: ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் அக்டோபர் 3-ம் தேதி மீண்டும் நடத்தப்படுகிறது. இதில், ஜூலை 12-ம் தேதி தேர்வெழுதி, 60 விழுக்காடு மதிப்பெண் பெறத் தவறியவர்கள் கலந்து கொள்ளலாம். இதற்காகத் தனியே விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. மேலும், முதல் தாள் மற்றும் 2-ம் தாளுக்கு விடையளிப்பதற்கான கால அவகாசமும் ஒன்றரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குநர் .வல்லவன் தெரிவித்துள்ளார்
.

No comments:

Post a Comment