Wednesday 29 August 2012

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் : ராமதாஸ்


      பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ’’தமிழ்நாட்டில் கல்வி பெறும் உரிமைச் சட்ட விதிகளின்படி அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. தேர்வு எழுதிய 6.67 லட்சம் பேரில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாக
2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
           ஒரு தேர்வில் 99.6 விழுக்காட்டினர் தோல்வி அடைந்திருப்பதை வைத்து பார்க்கும் போது தேர்வு எழுதியவர்களிடம் குறை இல்லை. தேர்வு முறையில் தான் குறை உள்ளது என்பதை உணர முடிகி றதுமனப்பாடம் செய்துவிட்டு வந்து ஒப்பிக்கும் முறையை ஊக்குவிக்கும் வகையில் தான் தகுதித் தேர்வு முறை அமைந்துள்ளது.
99 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தோல்வி அடைந்து விட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கூறுவது, ஆண்டுக்கணக்காக படித்த பட்டய மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது.
                இந்தியாவின் எதிர் காலம் சிறப்பாக வடிவமைக்கப்பட வேண்டும் என்றால் ஆசிரியர்களுக்கு சிறப்பான கல்வியும், பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். நிகழ்கால  சவால்களை சமாளிக்கும் வகையில் கல்வியியல் பட்ட, மற்றும் பட்டயப் படிப்புகளை மேம்படுத்த வேண்டும்.
          ஒன்றுக்கும் உதவாத தகுதித் தேர்வை நடத்துவது திறமையை வளர்க்கவோ, அளவிடவோ உதவாது. எனவே, ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை ரத்து செய்துவிட்டு, ஏற்கனவே இருந்த முறைப்படி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பின் அடிப்படை யில் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஓராண்டு கட்டாயப்பயிற்சி அளித்து ஆசிரியர் பணியில் அமர்த்த வேண்டும். அப்போது தான் தரமான கல்வியை வழங்கமுடியும்’’ என்று கூறியுள்ளார்

No comments:

Post a Comment