சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, காந்தி, சர்தார் பட்டேல் மற்றும் அம்பேத்கர் பற்றிய திரைப்படங்களின், "டிவிடி' வழங்கப்படும்,'' என, ராஜ்யசபாவில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், இது தொடர்பாக கூறியதாவது: "மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல்
மற்றும் அம்பேத்கர் ஆகியோரைப் பற்றிய திரைப்படங்களை, பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்' என, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்திடம் சி.பி.எஸ்.இ., கடந்த மே மாதம் கோரியிருந்தது. இதையடுத்து, இந்த திரைப்படங்களின், "டிவிடி'க்கள், பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ளன. இந்த "டிவிடி'க்களை தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கு இவை வழங்கப்படும். இவ்வாறு ஜெகத்ரட்சகன் கூறினார்.
No comments:
Post a Comment