Tuesday 25 September 2012

பாடப்புத்தகத்தில் "பென்னிக்குக்': பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை



            பள்ளி பாடப்புத்தகத்தில் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் "பென்னிக்குக்' வாழ்க்கை வரலாற்றை சேர்ப்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
              முல்லைப் பெரியாறு அணையை, ஆங்கிலேய பொறியாளர் பென்னிக்குக் கட்டினார். தொழில்நுட்பம்
வளராத காலகட்டத்தில், எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதற்காக தனது சொத்துக்களை விற்று, அணையை கட்டியவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என, அரசிற்கு கோரிக்கை வைத்தனர். இதன்படி, பென்னிக்குக் வரலாற்றை, பாடப்புத்தகங்களில் சேர்ப்பது தொடர்பாக, அரசு, தீவிரமாக பரிசீலித்து வருகிறது. வரும் கல்வியாண்டில் பென்னிக்குக் வாழ்க்கை வரலாறு, பள்ளி பாடப்புத்தக்கத்தில் இடம் பெற உள்ளது.

No comments:

Post a Comment