Monday 24 September 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்



         ஆசிரியர் தகுதித் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மட்டுமின்றி தற்போது பி.எட்., படிப்பை புதிதாக படித்தவர்களும் தேர்வெழுதலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
             புதிதாக பி.எட்., படித்தவர்களும் தேர்வெழத அனுமதி அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்யப்பட்டிருந்தனர். அதன்படி மனுக்கள் நேற்று விசாரனைக்கு வந்தது. இந்த கோரிக்கை குறித்து ஜூலை மாதத்திற்குப் பின் பி.எட்., படிப்பை முடித்தவர்களும் இத்தேர்வில் பங்கேற்க அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
                  புதிய விண்ணப்பதாரர்கள் செப்.,24ம் தேதி முதல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 3ம் தேதி நடப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இது அக்டோபர் 14ம் தேதிக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment