Monday 24 September 2012

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்



                     சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பாடப் பிரிவிற்கு, விரைவில் அங்கீகாரம் பெற்றுத் தரப்படும் என, பதிவாளர் உறுதியளித்ததை தொடர்ந்து, மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.
                சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வரும், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த
பட்டப்படிப்பிற்கு, அங்கீகாரம் கிடையாது. இதைக் கண்டித்து, மாணவர்கள் கடந்த, 17ம் தேதி முதல், தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் கூறிய சமாதானத்தை ஏற்க மறுத்து, மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால், பல்கலை நிர்வாகம் வரும், 7ம்தேதி வரை விடுமுறை அறிவித்தது.
                    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு,போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன், பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன், பதிவாளர் மீனாட்சி சுந்தரம், எம்.எல்.., பாலகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளுக்கு, ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பாடத்திற்கு, அரசு அங்கீகாரமான இணைத் தகுதியை, ஆறு மாதங்களுக்குள் பெற்றுத் தரப்படும் என, உறுதியளிக்கப்பட்டது.
                   மேலும், அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு ஏற்றுக்கொள்ள பல்கலைக் கழகம் நடவடிக்கை எடுக்கும் என, பதிவாளர் மீனாட்சி சுந்தரம் கையெழுத்திட்டு போராட்டக் குழு மாணவர்களிடம் உறுதி மொழி வழங்கினார்.
                  அதையேற்று, மாணவர்கள் தொடர் உண்ணாவிரதத்தை, நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு முடித்துக் கொண்டு கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment