Thursday 25 October 2012

தேசிய தகுதி நுழைவுத் தேர்வு 2013 மே 5ல் நடைபெறும்



        எம்.பி.பி.எஸ்/ பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, தேசிய தகுதி நுழைவுத் தேர்வு 2013 மே 5ல் நடைபெறும் என மத்திய மேல்நிலை கல்விவாரியம் (சி.பி.எஸ்..,) அறிவித்துள்ளது. மாணவர்களின் திறன்களை பரிசோதித்து, திறமையின் அடிப் படையில் மாணவர்களை தேர்வு செய்யவே தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (என்...டி.,) நடத்தப்படுகிறது. பிளஸ் 2 மாணவர்கள் பங்கு பெறும் இத்தேர்வு, நாடு முழுவதும் ஒரே தேர்வாக நடைபெறும். தேர்வில் பெறும் அதிகபட்ச
மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுரிகளில் சேர்க்கை நடைபெறும். இத்தேர்வுக்கான பாடத்திட்டத்தை, இந்திய மருத்துவ கவுன்சில் ஏற்கனவே அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment