Tuesday 30 October 2012

மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால் 3 ஆண்டுகள் வரை தண்டனை..


 பள்ளிக்கூடங்களில் மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்ற உள்ளது. பள்ளிகளில் ஆசிரியர்கள் மீதான புகார்கள், கட்டாய டியூசன் விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டுவர பள்ளிக்கூடங்களில் நேர்மையற்ற நடவடிக்கைகள்
தடுப்புச்சட்டம் என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவர உள்ளது.

இந்த புதிய சட்டம் சொல்வது என்ன?
-
மாணவர்களை அடிக்கக்கூடாது. அவர்கள் தகுதிவாய்ந்த தேர்வுகளை எழுதுவதற்கு தடை விதிக்கக்கூடாது.
-
குறைவாக மதிப்பெண் பெற்றதற்காக மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்கவும்கூடாது. மாணவர்களை வேண்டுமென்றே பெயில் ஆக்கக்கூடாது.
-
பள்ளிக்கூட பருவங்களின் இடையில் கட்டணம் வசூலித்தால் அதுவும் ஆராயப்படும்.
-
விதிமுறை மீறி கேபிடேஷன் கட்டணம் வசூலிக்கக்கூடாது.
- 6-
ம் வகுப்பு, 9-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு ஆகியவற்றில் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி சேர்க்கலாம்.
-
மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும். சில நேரங்களில் இரண்டும் விதிக்கப்படும்.
டெல்லியில் வரும் நவம்பர் 1- ந் தேதி நடைபெற உள்ள மத்திய கல்வி ஆலோசனை வாரியக் கூட்டத்தில் இப்புதிய சட்டத்துக்கான மசோதா முன்வைக்கப்பட இருக்கிறது. இக்கூட்டத்துக்குப் பிறகு சட்டமாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்
.

No comments:

Post a Comment