Saturday 27 October 2012

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் பதிவுமூப்பு தகவலை தெரிவிக்க வேண்டும்



                         ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களை தற்போதுள்ள நடைமுறை விதிகளின்படி வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே, தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு
பதிவு பற்றிய தகவல்களை தாங்கள் பதிவுசெய்துள்ள மாவட்டத்தின் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு 31-ந் தேதி அன்று நேரில் சென்று பதிவு அட்டையின் சான்றொப்பமிட்ட (அட்டஸ்டேசன்) 2 நகல்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு செல்லும்போது, ஏற்கனவே அனுப்பப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு கடிதத்தின் நகலையும், ஹால்டிக்கெட் நகலையும் எடுத்துச்செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment