Sunday 25 November 2012

சென்னை மருத்துவ கல்லூரி: 4 வருட புதிய மருத்துவ படிப்பு தொடக்கம்



                சென்னை மருத்துவ கல்லூரியில் 4 வருடம் மருத்துவம் சார்ந்த படிப்பு புதிதாக தொடங்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. பேச்சு மற்றும் காது குறைபாடு உள்ளவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்யும் 4 வருட பட்டப்படிப்பு ஆகும்இந்த படிப்பிற்கான அனுமதியை இந்திய மறுவாழ்வு கவுன்சில் கடிதம் அனுப்பியது. அதன்படி அக.,6ம் தேதி சென்னை மருத்துவ கல்லூரிக்கு கவுன்சில் வந்து சென்றது. இந்த படிப்புக்கு தேவையான கூடுதல் புத்தகங்கள் மற்றும் கூடுதல் உபகரணங்கள் வாங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 25 மாணவர்கள் படிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment