Saturday 29 December 2012

பள்ளி வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் தாமதம்



              அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில், ஆண்டுதோறும் வளர்ச்சிப் பணிகளாக, கூடுதல் வகுப்பறை கட்டடம், கழிப்பறை வசதி, சுற்றுச்சுவர் கட்டப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில், இத்திட்டத்திற்கு அனுமதி கிடைத்து, அந்த
கல்வியாண்டிற்குள் திட்டம் நிறைவேற்றப்படும். கிராமக் கல்விக்குழு, தலைமையாசிரியர் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றுவர்இந்த கல்வியாண்டில் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, பல மாதங்களாகியும், நிதி அனுமதி கிடைக்கவில்லை. இனிமேல், அனுமதி கிடைத்தாலும், இந்த கல்வியாண்டிற்குள் இத்திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை.கால தாமதத்தால், திட்ட மதிப்பீட்டு தொகை அதிகரிப்பதாலும், திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும். இதனால், மாநிலம் முழுவதும் இத்திட்டம் கிடப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment