Sunday 27 January 2013

ஊதிய முரண்பாடு நீக்கும் குழுவின் பரிந்துரையை நிறைவேற்ற ஆசிரியர் மன்றம் கோரிக்கை

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது, ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்றும், பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்றும்
அதிமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டை நெருங்க உள்ள நிலையில் மேற்கண்ட வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பின்னர் ஊதிய முரண்பாடுகளை களைய ஐஏஎஸ் அதிகாரி கிருஷ்ணன் தலைமையில் 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அரசிடம் தனது பரிந்துரையை அளித்தும் இதுவரை முதல்வர் மவுனமாக இருந்து வருகிறார். எனவே அந்த குழுவின் பரிந்துரையை அரசு வெளியிட வேண்டும். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி நிதி அறிக்கையின் மீதான விவாதத்தில் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment