Sunday 24 March 2013

பகுதி நேர பொறியியல் படிப்பு: ஏப்ரல் 1 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்



            அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.., பி.டெக்., படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன. விண்ணப்பப்
படிவங்களை சென்னையில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்திலும், கோவையில் அரசு பொறியியல் கல்லூரி, பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தைப் பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய மையங்களில் நேரடியாகவும், அஞ்சல் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
                        
விண்ணப்பக் கட்டணமாக பிற இனத்தவர்களிடம் ரூ. 300-ம், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் எஸ்.சி.. பிரிவினரிடம் ரூ. 150-ம் வசூலிக்கப்படும். இந்த விண்ணப்பக் கட்டணத்தை, "செயலர், பகுதி நேர பி.., பி.டெக்., மாணவர் சேர்க்கை, கோவை'' என்ற பெயரில் வரைவோலையாகச் சமர்ப்பிக்க வேண்டும். அஞ்சல் மூலமாக விண்ணப்பங்களைப் பெற விரும்புபவர்கள் வரைவோலையுடன்,  சுய விலாசமிட்ட அஞ்சல் உறையில் ரூ. 50 அஞ்சல் தலையை ஒட்டி, "செயலர், பகுதி நேர பி.., பி.டெக். மாணவர் சேர்க்கை, கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை'' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பகுதி நேர இளநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை விநியோகம் செய்யப்பட உள்ளன
.

No comments:

Post a Comment