Tuesday 26 March 2013

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 10.68 லட்சம் பேர் எழுதுகின்றனர்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை துவங்குகிறது. 10.68 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். கடந்த, 1ம் தேதியில் இருந்து, நடந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளையுடன் முடிகின்றன. இதைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வுகள், நாளை துவங்கி, ஏப்ரல், 12ம் தேதி வரை நடக்கின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து, 10 லட்சத்து, 68 ஆயிரத்து, 838 மாணவ, மாணவியர், தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், 5 லட்சத்து, 43 ஆயிரத்து, 152 பேர் மாணவர்கள்; 5 லட்சத்து, 25 ஆயிரத்து, 686 பேர் மாணவியர். 3,012 மையங்களில், தேர்வுகள் நடக்கின்றன. சென்னையில், 222 மையங்களில் நடக்கும் தேர்வில், 58 ஆயிரத்து, 436 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களில், 29 ஆயிரத்து, 101 பேர், மாணவர்; 29 ஆயிரத்து, 335 பேர், மாணவியர்.
தேர்வு நடக்கும் தேதிகள் விவரம்:
27.3.13 -
தமிழ் முதற்தாள்
28.3.13 -
தமிழ் இரண்டாம் தாள்
1.4.13 -
ஆங்கிலம் முதற்தாள்
2.4.13 -
ஆங்கிலம் இரண்டாம் தாள்
5.4.13 -
கணிதம்
8.4.13 -
அறிவியல்
12.4.13 -
சமூக அறிவியல்


No comments:

Post a Comment