Tuesday 26 March 2013

பள்ளிகளில் பொதுத்தேர்வு எதிரொலி: பேரணி, கருத்தரங்குக்கு தடை வருமா?



                      "பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் பங்குபெறும், பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை விதிக்க வேண்டும்" என, பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 1 ம் தேதி
தொடங்கி நாளை முடிகிறது. எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வுகள் நாளை துவங்கி, வரும் ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை நடக்கிறது. இதையடுத்து, முதலாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பொதுத்தேர்வுகள் அந்தந்த பள்ளிகளில் நடக்கிறது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பொதுத்தேர்வுகள் விரைவில் நடக்க உள்ளது.
                               
கரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி, மாணவ, மாணவியர்களை அழைத்து, குறிப்பிட்ட நாட்களை அனுசரிக்கும் வகையில், ஆண்டு தோறும் பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் கருத்தரங்குகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. தனியார் பள்ளிகள், அவர்களது மாணவ, மாணவியர்களை பெரும்பாலும், விழிப்புணர்வு பேரணிக்கு அனுப்புவதில்லை. கல்வித்துறை உள்ளிட்ட அதிகாரிகளும், இதை கண்டு கொள்வதில்லை. விடுமுறை நாட்களில் கூட, பேரணிக்காக அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அழைக்கும் கொடுமை, கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கனவே, அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் எதிர்பார்த்த அளவில் இல்லை.
                          
இந்நிலையில், பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலை யில், கடந்த வாரம் கலெக்டர் ஜெயந்தி துவக்கி வைத்த, உலக வனநாள் விழா மற்றும் கருத்தரங்கிற்காக மாணவ, மாணவியர்கள் வரவழைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, உலக காசநோய் விழிப் புணர்வு பேரணிக்காக தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் வரவழைக்கப்பட்டனர். தேர்வுகள் நெருங்கும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாண விகளை விழிப்புணர்வு பேரணிக்காக வரவழைத்து, முக்கிய விருந்தினர்கள் வரும் வரை பல மணி நேரம் காக்க வைத்து, கோடை வெயிலில் நடக்க வைத்து அலைகழிக்கப் படுகின்றனர். இதனால், கரூர் மாவட்டத்தில் மாணவ, மாணவி யர்களின் கல்வித்திறன் பாதிக்கும் அபாயம் உள்ளது.
                         
எனவே, பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில், பள்ளி மாணவ, மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தும் வகையில், அவர்கள் பங்குபெறும் விழிப்புணர்வு பேரணிகளை நடத்த தற்காலிகமாக தடை விதிக்க கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்
.

No comments:

Post a Comment