Tuesday 30 April 2013

29 ஆண்டுகளாக அரசு பணியாற்றி குறைந்தபட்ச பென்ஷன் கூட இல்லாத அவல நிலை..புதிய பென்ஷன் திட்டத்தின் கோர முகம்


குஜிலியம்பாறை அருகே, அரசு மேல்நிலை பள்ளியில், தையல் ஆசிரியையாக பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ஆசிரியை எலிசபெத், பென்ஷன் கிடைக்காததால், நூறு நாள் வேலைக்கு
சென்று வருகிறார். திண்டுக்கல்சாமிமுத்தன்பட்டியை சேர்ந்தவர்எலிசபெத், 60; திருமணமாகதவர். 10ம் வகுப்பு வரை படித்த இவர்தையல் தொழில் பயிற்சிமுடித்துள்ளார். 1982, ஜூலை,1ல்குஜிலியம்பாறை ஒன்றியம்சின்னழகுநாயக்கனூரில்அங்கன்வாடி பணியாளராக சேர்ந்தார். கடந்த, 2004ல்நத்தம்சிறுகுடி  அரசு  மேல்நிலைப்  பள்ளியில்தையல் ஆசிரியராகவும், 2007 முதல், கே.ராமநாதபுரம்  அரசு மேல்நிலை  பள்ளியிலும் பணிபுரிந்த இவர், 2011 பிப்., 28ல்ஓய்வு பெற்றார். புதிய பென்ஷன் திட்டத்திற்காகஇவரது சம்பளத்தில்மாதந்தோறும்பணம் பிடித்தம் செய்யப்பட்டதுபணி ஓய்வு பெற்றஇவருக்குஇரு ஆண்டுகளாகியும்இதுவரை பென்ஷன்வரவில்லை.பென்ஷன் தாமதம் மற்றும் தன்னிடம் பிடித்த தொகையையும்திருப்பி வழங்காததால்பணமின்றி சிரமப்பட்ட எலிசபெத்நூறு நாள் வேலைதிட்டத்தில் மண் சுமக்கும் வேலை செய்கிறார். எலிசபெத்  கூறியதாவது:பென்ஷன் கேட்டுமாநில முதன்மை கணக்காயருக்கு தபால்அனுப்பப்பட்டதுபுதிய பங்கேற்பு ஓய்வு ஊதிய திட்டத்தில்அரசு முடிவுஎடுக்காததால்தபால் திருப்பி அனுப்பப்பட்டதுமதுரை ஐகோர்ட் கிளையில்வழக்கு தொடுத்துள்ளேன்.தீர்ப்பு வரும் வரைசாப்பிடாமல் இருக்க முடியாதுஅல்லவாஇதனால் மாரம்பாடி ஊராட்சியில்நூறு நாள் வேலை திட்டத்தில்வேலை செய்கிறேன்இதில் கிடைக்கும் கூலியால்சாப்பாட்டு பிரச்னைதீர்ந்துள்ளதுபென்ஷன் கிடைத்தாலும்இப்பணிக்கு செல்ல முடிவுசெய்துள்ளேன்.ஆசிரியராக இருந்த நான்கூலி வேலைக்கு செல்வதால் எந்தசங்கடமும் இல்லைமன திருப்தியுடன் ஆத்மார்த்தமாக பணி செய்கிறேன்.இருந்த போதும்என்னிடம் பிடித்தம் செய்த தொகையை அரசு வழங்கவேண்டும்.இவ்வாறுஅவர் கூறினார்.

No comments:

Post a Comment