Friday 26 April 2013

சத்துணவுக்கான மானியம் அதிகரிப்பு 69.50 காசிலிருந்து ரூ.1.30 ஆக உயர்வு


சத்துணவுக்கான மானியத்தைதமிழக அரசு 69.50 பைசாவிலிருந்துரூ.1.30  உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் துவக்கநடுநிலைஉயர்நிலை மற்றும்  மேல்நிலைப் பள்ளிகளில்,  ஒன்று  முதல் 10ம்  வகுப்பு வரை படிக்கும் 
மாணவர்களுக்கு, 54 ஆயிரம்மையங்களில்  சத்துணவு  வழங்கப்படுகிறதுசத்துணவுக்கு தேவையான அரிசிபருப்புஎண்ணைமுட்டை  ஆகியவற்றை  அரசே  வழங்குகிறது. காய்கறி,  மசாலா பொருட்கள்  மற்றும் சமைக்கத்  தேவையான  விறகு ஆகியவற்றுக்காக,  ஒன்று  முதல் ஐந்தாம்  வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு,  தலா 69.50 காசுகளும்ஆறு முதல் 10ம்  வகுப்புவரையிலான மாணவர்களுக்கு, 79.50 காசுகளும்  வழங்கப்பட்டுவருகிறது. "விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ளதால், இத்தொகையை அதிகரிக்க வேண்டும்என்று சத்துணவு  ஊழியர்கள்போராடி வருகின்றனர்இந்நிலையில்சென்னைசமூக நலத்துறைஇயக்குனர் அலுவலகத்திலிருந்துஅனைத்து மாவட்ட சமூகநலஅலுவலகங்களுக்கும் ஒரு புதிய உத்தரவு அனுப்பப்பட்டுள்ளதுஇதில்,சத்துணவுக்குஒன்று முதல் ஐந்து வரை படிக்கும்  மாணவர்களுக்குபருப்புடன் சாதம் வழங்கும் நாளில் ஒரு மாணவனுக்கு ரூ.1.30  எனவும்,பலவகை சாதம் வழங்கும் நாட்களில் ஒரு மாணவனுக்கு ரூ.1.70 காசுகள்எனவும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே போல்ஆறுமுதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவனுக்கு பருப்புடன் சாதம்வழங்கும் நாளில்ஒரு  மாணவனுக்கு ரூ.1.40 ஆகவும்பல வகை சாதம்வழங்கும் நாட்களில்ரூ.1.80 காசுகள் ஆகவும் வழங்கப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளதுகாய்கறிமளிகைவிறகு உள்ளிட்டவற்றின்விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் அரசு மானியத் தொகையை உயர்த்தியுள்ளது.எனினும்அரசு உயர்த்திய இத்தொகை போதுமானதல்ல  எனதமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அதிருப்திதெரிவித்துள்ளதுஒரு மாணவனுக்கு  நான்கு ரூபாய்  ஒதுக்கினால்தான்சிரமமில்லாமல்  சத்துணவு  வழங்க முடியும் என இச்சங்க நிர்வாகிகள்தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment