Saturday 27 April 2013

பழைய பென்ஷன் திட்டம் வேண்டும் : அரசு பணியாளர் சங்க தலைவர் கோரிக்கை


"புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டுபழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும்,'' எனஅகில இந்திய மாநில அரசு பணியாளர் மகா சம்மேளன  தலைவர் கு. பாலசுப்பிரமணியன்  தெரிவித்தார். ராமநாதபுரத்தில்  அவர் 
கூறியதாவது:   தமிழகத்தில்  2006ம் ஆண்டு முதல்அரசு பணியாளர்  மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம்  மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதில் உள்ள குறைபாடுகளை களைய அமைக்கப்பட்ட  மூவர் குழுவின்  அறிக்கையை பெற்றுஅனைத்து  சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திஅறிக்கையை அமல்படுத்த வேண்டும்புதிய பென்ஷன் திட்டத்தை  ரத்து  செய்துபழைய பென்ஷன் திட்டத்தை  அமல்படுத்த வேண்டும்கடந்த சட்டசபை தேர்தலின்போது  முதலில் அறிவித்த கோரிக்கையை  நிறைவேற்ற வேண்டும்சத்துணவுஅங்கன்வாடி பணியாளர்கள் ஓய்வு பெறும்போதுஅவர்கள்வாங்கும் சம்பளத்தில் சரிபாதி தொகையை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். பதவிஉயர்வு பெற்றபின்பென்ஷன் பெற முடியாத அங்கன்வாடி பணியாளர்களுக்கு, உடனடியாக  பென்ஷன் வழங்க வேண்டும்மத்திய அரசு உயர்த்தி  வழங்கியது போலதமிழக அரசும்அகவிலைப்படியை உயர்த்தி வழங்க  வேண்டும்.  மேலும்இந்த அகவிலைப்படி  அடிப்படையில்ஊதியம் வழங்க  வேண்டும்மேலும்நாடு  முழுவதும்உள்ள ஒப்பந்த பணியாளர்களை  நிரந்தரப்படுத்த  வேண்டும்என்றார்

No comments:

Post a Comment