Tuesday 28 May 2013

பிளஸ் 1 துணை தேர்வு ஜூன் 5ம் தேதி ஆரம்பம்



            நெல்லை மாவட்டத்தில் மூன்று மையங்களில் பிளஸ் 1 துணை தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி ஆரம்பமாகிறது. பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு
வரும் ஜூன் மாதம் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வு மாணவ, மாணவிகளுக்கு தென்காசி .சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பாளை ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி, மாணவிகளுக்கு பாளை மேரிசார்ஜென்ட் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 மையங்களில் நடக்கிறது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று (28ம் தேதி) கடைசி நாளாகும். தேர்வுக்கான ஹால் டிக்கெட் 3ம் தேதி மதியம் அந்தந்த தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் காதர் சுல்தான் தெரிவித்தார்.

No comments:

Post a Comment