தூத்துக்குடியை சேர்ந்த காளீசுவரன் என்ற மாணவன் பிளஸ்–2 தேர்வுஎழுதி இருந்தார். இவருக்கு தேர்வு முடிவு வெளியிடப்படாமல் இருந்தது.இதனால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும், மாவட்ட கலெக்டரிடம்
தேர்வு முடிவு அறிவிக்க கோரி மனு கொடுத்தார். இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்துக்குதகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மாணவன் காளீசுவரனின் தேர்வுமுடிவு வெளியிடப்பட்டது. அதன்படி மாணவன் தமிழ்–183, ஆங்கிலம்–165,இயற்பியல்–172, வேதியியல்–165, கம்ப்யூட்டர் அறிவியல்–198, கணிதம் 189 மொத்தம் 1072 மதிப்பெண்கள் பெற்று உள்ளார். இந்த தகவல்பள்ளிக்கூடத்துக்கும், மாணவனுக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்ததகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயகண்ணு தெரிவித்தார்.
No comments:
Post a Comment