Tuesday 28 May 2013

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1 லட்சம்



                     சி.பி.எஸ்.., 12ம் வகுப்பு தேர்வில், அரசு பள்ளியில் படித்து, அதிக மதிப்பெண் பெற்ற, 200 மாணவர்களுக்கு, தலா, ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசு வழங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய கல்வி வாரியம் நடத்தும்,
சி.பி.எஸ்.., 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியானது. இதில், மாணவர்களும், மாணவியரும் சம அளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர். அரசுபள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஏராளமானோர், அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றிருந்தனர். அவர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பல்லம் ராஜு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், "9ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை, அரசு பள்ளியில் படித்து, அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவர்கள், 200 பேர் தெரிந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு, ஒரு லட்ச ரூபாய் வெகுமதி வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment