Tuesday 7 May 2013

பள்ளி தகவல் பலகையில் 15 நிமிடத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிட உத்தரவு



              "பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிட்ட, 15 நிமிடங்களில், பள்ளி தகவல் பலகையில், தேர்வு முடிவுகளை காட்சிப்படுத்த வேண்டும். இதை, செயல்படுத்த தவறும் தலைமை ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்" என ,
பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.  பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 9 காலை 10:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதை வெளியிடுவதில், புது நடைமுறைகளை, பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. முடிவு வெளியிட்ட 15 நிமிடங்களில், பள்ளிகளில் உள்ள தகவல் பலகையில், தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் பட்டியலை, காட்சிப்படுத்த வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை மீறும் தலைமை ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment