Saturday 25 May 2013

2013-14ம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கை



                 2013-14ம் கல்வியாண்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்க கல்வி
பட்டயப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் (DUET), முதன்மைக் கல்வி அலுவலங்களிலும் (CEO Office) மே 27 காலை 10.00 மணி முதல் ஜூன் 12ம் தேதி 5 மணி வரை, ஞாயிற்றுக் கிழமைத் தவிர மற்ற நாட்களிந்ல விறியோகப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500 தவிர ரொக்கமாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கானக் கட்டணம் ரூ.250 /- மட்டும்.
                         
இணையதளம் வழியாக ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்படும். விண்ணப்பத்தாரர் எந்த மாவட்டத்தில் விண்ணப்பித்தாரோ அத மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலோ அல்லது முதன்மைக் கல்வி அலுவலகத்தால் தெரிவு செய்யப்பட்ட மையத்தில் கலந்தாய்வில் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் எந்த ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தையும் தெரிவு செய்துக் கொள்ளலாம்.
கல்வித்தகுதி: +2வில் குறைந்தபட்சம் 540 மதிப்பெண்களாவது பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினத்தவர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சிறப்பு இட ஒதுக்கீடு: மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரரின் குழந்தைகள், சுதந்திர போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் ஆகியோருக்குச் சிறப்பு இட ஒதுக்கீடு உள்ளது. விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை விண்ணப்பம் வாங்கிய மையத்திலேயே ஜூன்12ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
.

No comments:

Post a Comment