கடந்த 2012 ஆம் ஆண்டில் ஜூன் 3ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கும் என மார்ச் 7ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டு ஜூலை 12ம் தேதி தகுதி தேர்வு நடந்தது. இந்த ஆண்டில் ஜூனில் தகுதித் தேர்வு
நடக்கும் என சூசகமாக கூறப்பட்டது. அறிவிப்புக்கு பின்னர் தேர்வுக்கு தயாராக 2 மாதங்களாவது அவகாசம் அளிக்க வேண்டும் என்பதால் இந்த ஜூனில் தேர்வு நடக்காது. எனவே ஆசிரியர் நியமனத்துக்கு ஏதாவது வழிவகை செய்து மாணவர்கள் நலனை காக்க வேண்டும் என பெற்றோர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுகின்றனர்.
No comments:
Post a Comment