Sunday 5 May 2013

ஜூன் 21 முதல் ஜூலை 30 வரை என்ஜினியரிங் கவுன்சிலிங்



               என்ஜினியரிங் கவுன்சிலிங் வரும் ஜூன் 21ம் தேதி முதல் ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலை., துணைவேந்தர் (பொறுப்பு) காளிராஜ் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது: இந்த வருடம் 2 1/2
லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் 50 ஆயிரம் கூடுதலாக அச்சடிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2 லட்சம் இடங்கள் நிரப்பப்படும்.என்ஜினீயரிங் கவுன்சிலிங் ஜூன் 21-ம்தேதி தொடங்கி ஜூலை 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. ரேண்டம் எண் ஜூன் 5-ம்தேதியும் ரேங்க் பட்டியல் 12-ம் தேதியும் வெளியிடப்படும். ஆகஸ்டு 1-ம் தேதி என்ஜினீயரிங் கல்லூரிகள் திறக்கப்படும். பி..ஆர்க்கிடெக் படிப்பிற்கு தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறினார்.

No comments:

Post a Comment