Friday 31 May 2013

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - ஒட்டுமொத்த தேர்ச்சி 89%


           இந்த 2013ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, பள்ளிகள் மூலமாக, மொத்தம் 10 லட்சத்து 51 ஆயிரத்து 62 பேர் எழுதினர். அவர்களில், மாணவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 794. மாணவிகளின்
எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 268 பேர். இவர்களில், ஒட்டுமொத்த அளவில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 35 ஆயிரத்து 215 பேர். அதன் தேர்ச்சி விகிதம் 89%. மாணவர்களில், 4 லட்சத்து 57 ஆயிரத்து 250 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 86%. மாணவிகளில், 4 லட்சத்து 77 ஆயிரத்து 965 பேர் தேர்ச்சி பெற்று, 92% தேர்ச்சி விகிதம் பெற்றனர். இவற்றில் 60%க்கும் மேலாக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 14 ஆயிரத்து 522 பேர்.
கடந்தாண்டு நிலவரம்

                       கடந்தாண்டு(2012) பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், 86.20% அளவே தேர்ச்சி விகிதம் இருந்தது. அவற்றில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 83.40% என்ற அளவிலும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 88.90% என்ற அளவிலும் இருந்தது. தேர்வெழுதியோரில், 60%க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 68 ஆயிரத்து 815 பேர்.

No comments:

Post a Comment