மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்குவழங்கப்படும் உதவித்தொகை இரு மடங்காக உயர்த்தி வழங்கப்படும்என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மாற்றுத்திறனாளி குழந்தைக ளுக்குகென 32 நடமாடும்
சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.சட்டசபையில் இன்று அவை விதி 110ன் முதலமைச்சர் ஜெயலலிதாகூறியதாவது: மாற்றுத் திறனாளிகளை மனித சமுதாயத்தின் ஓர் அங்கமாக அனைவரும் அங்கீகரிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியில் மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பினை உறுதி செய்யும் வகையிலும், ஏனையமக்களுக்கு இணையாக மாற்றுத் திறனாளிகள் வாழும் வண்ணமும்எனது தலைமையிலான அரசு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திவருகிறது. மாற்றுத் திறனாளி மாணவ மாணவியர் கல்வி பயில்வதைஊக்கப்படுத்தும் வகையில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும்மாணவமாணவியருக்கு 500 ரூபாயும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரைபயிலும் மாணவமாணவியருக்கு 1500 ரூபாயும், 9ம் வகுப்பு முதல் 12ம்வகுப்பு வரை பயிலும் மாணவமாணவியருக்கு 2000 ரூபாயும், இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவமாணவியருக்கு 3000 ரூபாயும்,பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயிலும்மாணவமாணவியருக்கு 3500 ரூபாயும் கல்வி உதவித் தொகையாகஆண்டுதோறும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.மாற்றுத் திறனாளி மாணவ மாணவியர் கல்வி கற்பதை மேலும்ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை நடப்பாண்டு முதல் இரு மடங்காக உயர்த்தி வழங்கப்படும்என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் 23,454மாற்றுத் திறனாளி மாணவ மாணவியர் பயன்பெறுவர். இதனால்அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 3 கோடியே 6 லட்சம் ரூபாய் கூடுதல் செலவுஏற்படும்.தற்போது இரு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்குஇணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட 400 பெட்ரோல் ஸ்கூட்டர்கள்கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ / மாணவிகளுக் குமுன்னுரிமையிலும், எஞ்சிய ஸ்கூட்டர்கள் பணிபுரியும் மற்றும்சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லாமல்வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளதால், பயனாளிகளின் எண்ணிக்கை தற்போதுள்ள 400 இல் இருந்து 1000 ஆக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென ஆண்டொன் றிற்கு 5 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்யப்படும். மாவட்டத் தலைநகரங்களில் 6 வயது வரை உள்ள மன வளர்ச்சி குன்றியகுழந்தைகளுக்கென 32 ஆரம்ப பயிற்சி மையங்களும், செவித் திறன்குறையுடைய குழந்தைகளுக்கென பரிந்துரை செய்வாதாக குழுத்தலைவர் உறுதியளித்தார்.இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும்ஆயத்தீர்வை துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி,சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்,வேளாண்மைத் துறை அமைச்சர், வருவாய்த் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நிதித் துறை முதன்மைச் செயலாளர்,வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர், கூடுதல் தலைமைச்செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் அரசுத் துறை உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment