நாமக்கல்லில், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, மாவட்ட கிளைக் கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் பழனியப்பன் தலைமை வகித்து பேசினார். கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, தமிழக அரசு
ஊழியர், ஆசிரியர்களுக்கு, எட்டு சதவீத அகவிலைப்படி உயர்த்தி அறிவித்த, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. கல்வி மானியக் கோரிக்கையின்போது, 29 கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, கல்வித் துறை அமைச்சரிடம், கூட்டணி மாநில பொதுச் செயலாளர் முத்துசாமி மனு அளித்ததற்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைச் செயலாளர் சிவக்குமார் உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment