Friday 31 May 2013

தமிழக எஸ்.எஸ்.எல்.சி வரலாற்றிலேயே முதல் முறையாக.. படித்து நொறுக்கிய மாணாக்கர்கள்!

இதுவரை இல்லாத அளவுக்கு 10ம் வகுப்புத் தேர்வில் மாணவ, மாணவியர்கள் பின்னி எடுத்துள்ளனர். இப்படி ஒரு சாதனை, இப்படி ஒரு தேர்ச்சியை இதுவரை தமிழக எஸ்.எஸ்.எல்.சி வரலாறு கண்டதில்லை. அப்படி ஒரு சாதனையைப் படைத்து
காலரை உயர்த்தி விட்டு நிற்கின்றனர் மாணவ, மாணவியர்கள். மாணவியர்களே அதிகம் பாஸ் என்று சொல்வது சர்க்கரைப் பொங்கல் இனிப்பாக இருக்கிறது என்பதற்குச் சமம். அது வழக்கமாக நடப்பதுதான். ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் மூன்று இடங்களில் ஏகப்பட்ட மாணவ, மாணவியர் பாய்ந்து வந்து பங்கு போட்டு பட்டையைக் கிளப்பியிருப்பது இதுவரை தமிழகம் கண்டிராதது.

No comments:

Post a Comment