Sunday 19 May 2013

கவுன்சலிங்கில் திடீர் மாற்றம் : நாளை ஆசிரியர்கள் கலந்தாய்வு - நாளிதழ் செய்தி



                தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் கலந்தாய்வு நாளை (20ம் தேதி) துவங்குகிறது. ஆன்லைன் மூலம் முதல் முறையாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. எனவே அனைத்து வகையான கலந்தாய்விற்கும் அந்தந்த மாவட்டத்திலேயே
பங்கேற்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளி கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டும் துவங்கும் முன்பாக பொது மாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும். இதன் மூலம் அந்த கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே பொது மாறுதல் மூலம் புதிய பள்ளிக்கு செல்ல முடியும். தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்விற்கான விண்ணப்பங்களை கடந்த 14ம் தேதி முதல் நேற்று மாலை வரை பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு நாளை (20ம் தேதி) காலை 9 மணிக்கு துவங்குகிறது. எனினும் கலந்தாய்வில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கலந்தாய்வு அட்டவணை வருமாறு: *அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மாவட்டத்திற்குள், மாவட் டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு: 20,05,13, காலை 9 மணி. *அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு: 21,05,13 காலை 9 மணி. *அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு: 22,05,13 காலை 9 மணி. *அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் மாவட்டத்திற்குள், மாவட் டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு: 23,05,13, காலை 9 மணி. மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் நடக்கும் கலந்தாய்விற்கு விண்ணப்பித்தவர்களும் தற்போது பணிபுரியும் மாவட்டத்திலேயே நடக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். அதாவது, மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் பங்கேற்பவர்கள் முன்பு சென்னையிலோ அல்லது எந்த மாவட்டத்திற்கு மாறுதல் பெற விரும்புகிறாரோ அந்த மாவட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். தற்போது ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடப்பதால் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் விரும்புபவர்களும் தாங்கள் பணிபுரியும் மாவட்டத்திலேயே கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. கலந்தாய்வு நடக்கும் இடம் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் அறிவிக்கப்படும். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பாளையங்கோட்டை, மகாராஜநகர் ஜெயேந்திரா வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலந்தாய்வு நடத்தப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் காதர் சுல்தான் தெரிவித்தார்.

No comments:

Post a Comment