01.04.2004 முதல் மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் மேலும் ஒரு அபாயகரமான முடிவினை இடைக்கால ஓய்வூதிய நிதி
ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் (PFRDA) எடுத்துள்ளது. இது நாள் வரை TRUSTEE
BANK- (அறங்காவலர் வங்கி) ஆக மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன வங்கியான BANK OF INDIA ஓய்வூதிய நிதியனை கையாண்டு வந்தது. வருகின்ற 01.07.2013 முதல் TRUSTEE BANK (அறங்காவலர் வங்கி) ஆக வெளிநாட்டு தனியார் வங்கியான AXIS BANK ஓய்வூதிய நிதியை கையாளும் வங்கியாக தேர்வு செய்யபப்பட்டுள்ளது.NPS திட்டத்தில் ஏறக்குறைய 60 ஆயிரம் கோடி உள்ளது. அதை கையாளும் உரிமை AXIS வங்கிக்கே உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பல அமெரிக்க தனியார் வங்கிகளில் 3 லட்சம் கோடி ரூபாய் ஓய்வூதிய நிதி திவால் ஆகிவுள்ள நிலையில் PFRDA -ன் TRUSTEE
-BANK (அறங்காவலர் வங்கி) ஆக தேர்வு செய்யபப்பட்டுள்ளது.ஓய்வூதியத்தில் தனியார் மயத்தின் முதல் படியாகும் . பல்வேறு நாட்டுடைமை வங்கிகளுக்கு பின்னடைவு ஏற்படுத்தும்.எனவே ஆசிரியர் நண்பர்களே ! அரசு ஊழியர்களே !! ஒன்றுபடுவோம் !போராடுவோம்!! வெற்றி பெறுவோம்!!!
தொகுப்பு -எங்கல்ஸ்-
இது தொடர் பாக உங்கள் comments பதிவு செய்ய -engelsdgl@gmail.com
No comments:
Post a Comment