Monday 13 May 2013

TET மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் இவ்வாண்டு நடைபெறும் பணிமாறுதலுக்கு தகுதியற்றவர்கள்.



                        பள்ளிக்கல்வித் துறையில் TET மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு   வழங்கப்பட்ட பணி நியமன ஆணையில் பள்ளிக் கல்வி இணை இயக்குனர் அவர்களால் 15 கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் 13வது  நிபந்தனை 
இடம் பெற்றுள்ள தகவல்"TET மூலம் தேர்வான சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள பள்ளியில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும்” என ஆணையிடப்பட்டுள்ளது. எனவே TET மூலம் தேர்வான ஆசிரியர்கள்  இவ்வாண்டு நடைபெறும் பணிமாறுதலுக்கு தகுதியற்றவர்கள் ஆவர். இதே தகவல் தொடக்கக்கல்வி துறையில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.

No comments:

Post a Comment