Thursday 27 June 2013

பூமியைப் போன்றே மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை கொண்ட 3 புதிய கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.



             விண்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டத்தில் கிளைஸ் 667-சி என்ற நட்சத்திரத்தை மூன்று கோள்கள் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதை இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தலைமையிலான குழு
கண்டுபிடித்துள்ளது. அதிநவீன தொலைநோக்கி மூலம் வானியல் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது இந்தப் புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 3 கோள்களும் பூமியை விட அளவில் பெரியதாக உள்ளன. பூமியைப் போலவே இருக்கும் இந்தக் கோள்கள் அதிக வெப்பமாகவோ, அதிக குளிராகவோ இல்லாமல் போதிய நீர் ஆதாரத்துடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியிலிருந்து 22 ஒளி ஆண்டு தூரம் கொண்ட இந்தக் கோள்கள் மற்ற நட்சத்திரக் குடும்பங்களை விட அருகில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் கொண்ட கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது இதுவே முதல் முறை. இந்தக் கோள்கள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment