Sunday 30 June 2013

எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் பட்டியலில் குளறுபடி



             எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் பட்டியலில், பல்வேறு குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு, வழங்கிய மதிப்பெண் பட்டியலை, திரும்பப் பெறுகின்றனர். தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதிய
மாணவர்களுக்கு, மதிப்பெண் பட்டியல் பள்ளிகளில், வழங்கப்பட்டு வருகிறது. மதிப்பெண் பட்டியலில், தேர்வு பதிவு எண், பெயர், பிறந்த தேதி, தேர்வு எழுதிய மையம், புகைப்படம் மற்றும் பெற்ற மதிப்பெண்களின் விவரம் ஆகியவை, கம்ப்யூட்டரில் அச்சிட்டு, வழங்கப்படுகின்றன. திருவாரூர் மாவட்டத்தில், வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியல்களில், சான்றிதழில் நேர் கோடு விழுந்துள்ளதால், பிறந்த தேதி மற்றும் மதிப்பெண் விவரம், சரியாக தெரியவில்லை. இதனால், அவற்றை திருத்தி, புதிய சான்றிதழ் பெற, உரிய பள்ளி தலைமை ஆசிரியர்கள், திரும்ப பெற்று வருகின்றனர். இவை, மாவட்ட கல்வித் துறை மூலம், தேர்வுத் துறைக்கு அனுப்பப்படுகின்றன.

No comments:

Post a Comment