Saturday 29 June 2013

தொடக்கக் கல்வி துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு மாவட்ட அளவில் விடுமுறை பட்டியல் அறிவிப்பதில் இழுபறி, ஆசிரியர்கள் கவலை



              இந்த கல்வியாண்டில் பள்ளி திறந்து ஒருமாதம் கடந்த நிலையில் தொடக்க கல்வி அதிகாரிகள் ஆண்டு முழுவதும் செயல்பட வேண்டிய பள்ளி நாட்களை திட்டமிடுவதில் மெத்தனம் காட்டுவதாக ஆசிரியர்கள்
கவலை தெரிவித்துள்ளனர். ஆண்டு திட்டம் எனும் விடுமுறைப்பட்டியல் வெளியிடப்படாததால் குழப்பமடைந்துள்ளனர். இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை தனக்கென நாட்காட்டி வெளியிட்டு உள்ளது. ஆனால் தொடக்கக்கல்வித்துறை பொறுத்துவரையில் ஒவ்வொரு மாவட்ட அளவில் தயாரிக்கப்பட்டு அதையே அந்தந்த மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை பட்டியல் நடைமுறைப்படுத்ததால், பள்ளி வேலை நாட்கள் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் நீட்டிக்கிறது. இதனால் இன்று கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் அதிகாரிகளின் வாய்மொழி உத்திரவுப்படி வேலைநாளாக தொடக்க நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகிறது. சனி பள்ளி வேலை நாள் என்பதை முன்கூட்டி குறிப்பிட்டு கால இடைவெளி விட்டு வெளியிடாமல், வியாழன் அல்லது வெள்ளி மதியத்திற்கு மேலே உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் அறிவிப்பதை தவிர்த்து முன் கூட்டியே திட்டமிட்டு அறிவிக்க ஆசிரியர்கள் கோருகிறார்கள். இவ்வாறு கடைசி நேர அறிவிப்புகளால் ஆசிரியர்கள் மத்தியில் மன உளைச்சலும், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் மனப்பான்மை குறைவதுடனும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர். எனவே இந்த பிரச்சனையில் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளமாறு ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
செய்தி பகிர்வு : ..கூட்டணி

No comments:

Post a Comment