Saturday 27 July 2013

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை விமர்சித்ததாகஇடைநிலை கல்வி இணை இயக்குநரைக் கண்டித்து முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர் மாவட்ட ஆட்சியர் 
அலுவலகம் எதிரில் வெள்ளிக்கிழமைமாலை நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.மாநில அமைப்புச் செயலர் தமிழ்செல்வன் பேசினார்மாவட்டச் செயலர்ராஜேந்திரன்சேகர்ராஜாஜெய்சங்கர்பெருமாள் ராஜாஞானஒளி,வெற்றிச்செல்விகேத்ரின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கடலூர் மாவட்டத்தில் அரசு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம்குறைந்தது தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய இடைநிலைக்கல்வி இணை இயக்குநர் லதாதலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறதுமாணவர்களின் நலன்களுக்காக பணியாற்றி வரும் ஆசிரியர்களைஅநாகரிகமாக விமர்சித்ததாக இடைநிலை கல்வி இணை இயக்குநரின்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது எனசங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment