Tuesday 27 August 2013

ராதாகிருஷ்ணன் விருதுக்கு 360 ஆசிரியர் இன்று தேர்வு



                       "ராதாகிருஷ்ணன் விருது'க்குதகுதி வாய்ந்த 360 ஆசிரியரை தேர்வு செய்யபள்ளிக்கல்வி இயக்குனர்ராமேஸ்வர முருகன் தலைமையிலான மாநில தேர்வுக் குழுஇன்று,சென்னையில் கூடுகிறது. முன்னாள் ஜனாதிபதி
ராதாகிருஷ்ணன் பிறந்த நாளானசெப்., 5,தேசிய அளவில்ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளையொட்டிசிறந்த ஆசிரியரைத் தேர்வு செய்துதமிழக அரசு, "ராதாகிருஷ்ணன் விருதுவழங்கி வருகிறது. விருது, 5,000 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை,அரசுவழங்குகிறது. மாநிலத்தில், 64 கல்வி மாவட்டங்கள் உள்ளன. பள்ளி கல்வித் துறை தரப்பில்ஒரு கல்வி மாவட்டத்திற்குஇருவர் வீதமும்தொடக்க கல்வித் துறையில்ஒரு கல்வி மாவட்டத்திற்கு,மூன்று பேர் வீதமும்தகுதி வாய்ந்த ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும்மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட வேறு சில துறைகளில் இருந்தும்தகுதி வாய்ந்த ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். மொத்தத்தில், 360ஆசிரியர்களுக்குவரும் செப்., 5ம் தேதிவிருது வழங்கப்பட உள்ளது. மாவட்ட அளவில்,அதிகாரிகள் பரிந்துரை செய்து அனுப்பியுள்ள விண்ணப்பங்களை ஆய்வு செய்துதகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்யபள்ளிக்கல்வி இயக்குனர்ராமேஸ்வர முருகன் தலைமையிலான மாநில தேர்வுக் குழுஇன்றுசென்னையில் கூடுகிறது . மாநிலக் குழு,விண்ணப்பங்களை ஆய்வு செய்து, 360 ஆசிரியரைதேர்வு செய்ய உள்ளது. தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்குஇந்த வார இறுதிக்குள்அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்.செப்., 5ம் தேதி மாலைசென்னைசேத்துப்பட்டுஎம்.சி.சி.பள்ளியில் நடக்கும் விழாவில்பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன்விருதுகளை வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளைபள்ளி கல்வித் துறைமும்முரமாக செய்து வருகிறது.

No comments:

Post a Comment