Saturday 21 September 2013

சுந்தரனார் பல்கலையில் பி.எட்., தொலைதூரக் கல்வி படிப்பு.

              சுந்தரனார் பல்கலையில்தொலைதூரக் கல்வி மையத்தில் பி.எட்.,படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளதுவிண்ணப்பதாரர்கள் இளநிலை/முதுகலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க
வேண்டும். பிற்படுத்தப்பட்டோர்பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு அளிக்கப்படும். படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

                     இளநிலை / முதுகலை படிப்பில் பெற்ற மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அக்டோபர் 4ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு சுந்தரனார் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment