Saturday 26 October 2013

குரூப்-1 தேர்வெழுத, நேரம் போதவில்லை" என தேர்வர்கள் புலம்பினர்.

           குரூப்-1 பணிகளுக்கான தற்போதைய தேர்வு முறையில், "அப்ஜக்டிவ்" முறையிலான கேள்விகள் இல்லை. அனைத்து கேள்விகளும்விரிவாக விடை அளிக்கும் வகையில் இருப்பதால், தேர்வெழுதநேரம் போதவில்லை" என தேர்வர்கள் புலம்பினர். தமிழக அரசு தேர்வாணையம் மூலம்புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில்முதல்
முறையாககுரூப்-1மெயின் தேர்வு,சென்னையில் மட்டும்நேற்று14 மையங்களில் நடந்தது. டி.எஸ்.பி.,துணை கலெக்டர்மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில்,காலியாக உள்ள25 பணியிடங்களை நிரப்பநடந்த இத்தேர்வில்,மாநிலம் முழுவதிலும் இருந்து1,372 பேர் பங்கேற்றனர்.
                       காலை10:00 மணி முதல்பகல்1:00 மணி வரைதேர்வு நடந்தது. திருவல்லிக்கேணிஎன்.கே.டி.பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தைடி.என்.பி.எஸ்.சி.தலைவர்நவநீதகிருஷ்ணன்,பார்வையிட்டார். என்.கே.டி.பள்ளியில்கோவைஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த100 தேர்வர்கள்தேர்வெழுதினர். கோவையைச் சேர்ந்தரேஷ்மா கூறுகையில், "நான்முதல் முறையாகஇப்போது தான்குரூப்-1 தேர்வை எழுதினேன். முதல்நிலைத் தேர்வில் தேர்வு பெற்றுதற்போதுமெயின் தேர்வை எழுதியுள்ளேன். கேள்விகள்கடுமையாக இல்லை. நன்றாக எழுதினேன்" என்றார். ஈரோட்டைச் சேர்ந்ததினேஷ் கூறியதாவது: பழைய பாடத்திட்டத்தில்இரு தேர்வுகள் மட்டுமே நடக்கும். தற்போது,மூன்று தாள் தேர்வுகள் நடக்கின்றன. பழைய பாடத்திட்டத்தில்,முதல்தாள் தேர்வில்40 கேள்விகளும்இரண்டாம் தாள் தேர்வில்,35 கேள்விகளும், "அப்ஜக்டிவ்" முறையில் இருக்கும். இதர கேள்விகள்விரிவாக விடை எழுதும் வகையில் இருக்கும்.

                         ஆனால்தற்போது, "அப்ஜக்டிவ்" முறையிலான கேள்விகள் கிடையாது. அனைத்து கேள்விகளுமேவிரிவாக விடை எழுதும் வகையில் தான் அமைக்கப்பட்டுள்ளன. இதனால்விடை எழுத,போதிய நேரம் கிடைக்கவில்லை. பாடத்திட்டத்திற்கு உட்பட்டு தான்கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகள்ஓரளவிற்கு நன்றாக இருந்த போதும்விடை எழுதநேரம் கிடைக்காதது தான் குறை. இவ்வாறுதினேஷ் கூறினார். இதேபோல்பல தேர்வர்கள்நேரம் போதவில்லை என,தெரிவித்தனர். நேற்று300 மதிப்பெண்களுக்குதேர்வு நடந்தது. தொடர்ந்துஇன்றும்நாளையும்தலா300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும். இந்த தேர்வில்அதிக மதிப்பெண் பெறுபவர்கள்,நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். பின்மெயின் தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண் (120 மதிப்பெண்) ஆகியவற்றின் அடிப்படையில்இறுதி தேர்வுப்பட்டியல் வெளியாகும். நவம்பர் இறுதிக்குள்இறுதி பட்டியலை எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment