Tuesday 29 October 2013

முதுகலை ஆசிரியர் தமிழ் பாடம் மறுதேர்வுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை.



              முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்யடி.ஆர்.பி.,நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில்தமிழ் பாடத்திற்கு மறுதேர்வு நடத்த அளிக்கப்பட்ட உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்குமுதுநிலை
ஆசிரியர்களை நியமிப்பதற்கானஆசிரியர் தகுதித் தேர்வை கடந்த ஜுலை மாதம் டி.ஆர்.பி., நடத்தியது. இதில் தமிழ் பாடத்திற்கு நடத்தப்பட்ட தேர்வில்வினாத்தாளில் அதிகளவிலான பிழைகள் இருந்தன. எனவேபெரிய குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்துசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து,வழக்கை விசாரித்த நீதிமன்றம்தமிழ் பாடத்திற்கான தேர்வை ரத்துசெய்துஅப்பாடத்திற்கு மட்டும் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது. ஆனால்இத்தீர்ப்பை எதிர்த்துமதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அடங்கிய அமர்வுமறுதேர்வு நடத்துமாறு அளிக்கப்பட்ட உத்தரவை ரத்துசெய்து தீர்ப்பளித்தது.

No comments:

Post a Comment